Digital Campus, Madras Sanskrit College

LEARNING   STARTS   HERE





  • நமது ஸம்ஸ்க்ருதம் - விவரங்கள்


    நான்மறைகள், புராணங்கள், இதிஹாஸங்கள் போன்ற​ பொக்கிஷங்கள் நிறைந்த​ ஸம்ஸ்க்ருத​ மொழியை எளிமையாக​ இணையதளம் மூலம் பயில​ நல்லதொரு வாய்ப்பைச் சென்னை ஸம்ஸ்க்ருத​ கல்லூரி, "நமது ஸம்ஸ்க்ருதம்" என்ற பாடத்திட்டம் மூலமாக​ ஏற்ப்படுத்துகிறது. இந்த​ வகுப்புகள் வாரத்திற்கு இருமுறை வீதம் சுமார் ஐந்து மாதங்களில் நிறைவடையும். மாணவர்கள் எளிமையான​ ஸம்ஸ்க்ருதத்தில் உரையாடவும், எழுதிப்படிக்கவும், எளிமையான​ ஸம்ஸ்க்ருதத்தைப்புரிந்து கொள்ளவும் எவ்வண்ணம் இயலுவார்களோ அவ்வண்ணம் இந்தப்​ பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளோம். R.S. வாத்யார் & சன்ஸ் ப்ரசுரித்த "பாலாதர்ஶ​:" என்ற​ புத்தகமானது இந்த​ வகுப்புகளின் பாடப்புத்தகமாகும். எழுத்துக்களிலிருந்து துவங்குவதால், இவ்வகுப்புகளில் சேர்ந்து பயிற்ச்சிபெற​​ ஸம்ஸ்க்ருதத்தில் எந்த​ முன்-ஞானமும் தேவையில்லை.

    வகுப்பு நேரம்: செவ்வாய் மற்றும் சனி மாலை 7:00pm - 8:00pm



  • FAQ


    1. கேள்வி: நமது ஸம்ஸ்க்ருதம் இணயவழிப்பாடங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?


    பதில்: இணையவழிப்பாடங்களை மெற்கொள்வதற்குத் தமிழ் மொழியும், கணினி பயன்படுத்துதலும் தெரிந்திருந்தாலே போதும் மற்றெந்த தகுதியும் வேண்டாம்.



    2. கேள்வி: நமது ஸம்ஸ்க்ருதம் பாடங்களை இணையதளம் மூலம் கற்க ஓர் குறிப்ட்ட நேரத்தில் கணிணியின் முன் அமர வேண்டுமா?


    பதில்: ஆம். நமது ஸம்ஸ்க்ருதம் என்ற​ இந்த​ பாடத்திட்டமானது இணையவழியிலே நேறிடையாகக்​ (live/interactive) கற்பிக்கப்படுவதால் வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் இணையதளம் மூலம் இணைந்திருக்க வேண்டும்.



    3. கேள்வி: நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்தில் மொத்தம் எத்தனை வகுப்புகள் ? எப்பொழுது பாடத்திட்டம் நிறைவடையும்?


    பதில் : வாரம் தோரும் 2 வகுப்புகள் வீதம் மொத்தம் 35 வகுப்புகள். சுமார் ஐந்து மாதங்களில் முடிவடையும். இடையே பண்டிகை போன்ற​ காரணங்களால் வகுப்புகள் தடைபெறும் பட்சத்தில் பாடத்திட்டத்தின் நிறைவு சற்றே தாமதமுமடையலாம்.



    4. கேள்வி: ஒரு வேளை இடையே ஒருசில​ வகுப்புகளில் என்னால் பங்கு கொள்ள​ முடியவில்லை என்றால் என்ன​ செய்வது ?


    பதில் : இடையே ஒருசில​ வகுப்புகளில் பங்கு கொள்ள​ முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நடத்தப்படும் பாடங்களின் ஒளிப்பதிவுகளை நாங்கள் இந்த​ இணையதளத்திலேயே பதிவேற்றம் (upload) செய்யுவோம். அந்த​ ஒளிப்பதிவுகளைக்கொண்டு விட்டுப்போன​ வகுப்புகளின் விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒறுகால் தொடற்சியாக​ மூன்று பாடங்களுக்கு மேல் நேரிடையாக​ பங்குகொள்ள​ இயலவில்லை என்றால் தாங்கள் பாடத்திட்டத்திலிருந்து முன்னறிவிப்பில்லாமல் நீக்கப்படுவீர்கள். ஒளிப்பதிவுகள் பாடத்திட்ட ஆரம்பத்திலிருந்து ஒரு வருட காலம் இணையதளத்தில் இருக்கும்.



    5. கேள்வி: நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்திற்குத் தேவையான​ புத்தகங்கள் யாவை? அவைகளை எவ்வாறு பெறவேண்டும்?


    பதில் : நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்திற்குத் தேவையான​ புத்தகங்கள் ஶப்தமஞ்ஜரீ மற்றும் பாலாதர்ஶ​: இவ்விரண்டும் ஸம்ஸ்க்ருத​ புத்தகங்கள் கிடைக்கும் கடைகளில் (கிரி ட்ரேடிங்க் போன்ற​ கடைகளில்) கிடைக்கும். இவைகளை மாணவர்களே பெற்றுக்கொள்ள​ வேண்டும். கல்லூரி வழியாக இப்புத்தகங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது. இணையதளம் மூலம் பெற,​ கீழ்கண்ட​ முகவரிகளைப் பயன்படுத்தலாம்:

    Buy Infant Reader

    Buy Sabda Manjari

    அல்லது இவ்விரண்டு புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய​ இந்த வளைதளத்தின் முகப்பிலுள்ள​ LIVE BOOKS என்ற​ Menu-வைப் பயன்படுத்தலாம்.



    6. கேள்வி: இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?


    பதில் : Google Chrome அல்லது Micrsoft Edge போன்ற​ browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக​ விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.